Published : 23 Oct 2020 07:06 PM
Last Updated : 23 Oct 2020 07:06 PM

பிரேசிலில் கரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 31,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 503 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய கரோனா தொற்றின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் 1,55,962 பேர் கரோனாவுக்கு பிரேசிலில் இதுவரை பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முன்னதாக, சீனாவிடமிருந்து சுமார் 46 மில்லியன் டோஸ்கள் கரோனா தடுப்பு மருந்துகளை பரிசோதனைக்காக பிரேசில் வாங்க இருந்தது. இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தை வாங்க போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறி இருக்கிறார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்

இந்த நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x