Published : 23 Oct 2020 05:38 PM
Last Updated : 23 Oct 2020 05:38 PM
உலக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸிலிருந்து இதுவரை சுமார் 3.1 கோடி பேர் மீண்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் மருத்துவ பல்கலைகழமான ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதில் பலர் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3.1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. அமெரிக்காவில் கரோனாவுக்கு 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்க்ள் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் 77 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT