Published : 22 Oct 2020 04:56 PM
Last Updated : 22 Oct 2020 04:56 PM

தென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

தென்கொரியாவில் கரோனா கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிதாக 121 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “தென்கொரியாவில் கரோனா கட்டுப்பாடுகள் சில நாட்களுக்கு முன்னர் குறைக்கப்பட்டன. இந்த நிலையில் தென்கொரியாவில் கரோனா பாதிப்பு மூன்றிலக்க எண்ணைத் தொட்டுள்ளது.

தென்கொரியாவில் 121 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,543 ஆக அதிகரித்துள்ளது.

சியோல் மற்றும் புசன் நகரில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் கரோனா இறப்பு விகிதம் 1.76% ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் சதவீதம் 92% ஆக உள்ளது. இந்த நிலையில் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன்பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் தென்கொரியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டது.

இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்கொரியாவில் அதற்கு முன்னரே தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x