Published : 21 Oct 2020 09:46 PM
Last Updated : 21 Oct 2020 09:46 PM

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கரோனா

சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து சுகாதாரத் துறை தரப்பில், “ ஒவ்வொரு வாரமும் கரோனா தொற்று இரண்டு மடங்காகி வருகிறது. இது தொடர்ந்தால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பும் நிலை ஏற்படும் “ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்தில் 5, 583 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுமார் 86, 167 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. அதே நேரத்தில் தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x