Published : 20 Oct 2020 10:10 PM
Last Updated : 20 Oct 2020 10:10 PM

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் ஜல்ரெஸ் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் பல்க் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x