Published : 20 Oct 2020 06:34 PM
Last Updated : 20 Oct 2020 06:34 PM

பாகிஸ்தானில் டிக் டாக் மீதான தடை நீக்கம்

டிக் டாக்கில் சில மாறுதல்களை ஏற்படுத்திய பின்னர், பாகிஸ்தானில் டிக் டாக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் தொலைத்தொடர்புத் துறை தரப்பில், “பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. செயலியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதாக டிக் டாக் நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் தரப்பில், “பாகிஸ்தான் அரசின் தொடர்ச்சியான உரையாடலை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 4 கோடிக்கு அதிகமானவர்கள் டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் விதிகளுக்குப் புறம்பான வீடியோக்கள் டிக் டாக்கில் இடம்பெறுவதாக பாகிஸ்தான் அரசு சமீபத்தில் தடை செய்தது.

இந்த நிலையில் மாற்றங்களைக் கொண்டு வந்த பின்னர் மீண்டும் டிக் டாக்கிற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு அந்நாட்டு சமூக வலைதளங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணித்தும் வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x