Published : 19 Oct 2020 08:18 PM
Last Updated : 19 Oct 2020 08:18 PM
போர்ச்சுக்கல்லில் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போர்ச்சுக்கல் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல்லில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் சுகாதாரத் துறை செயலாளர் அண்டோனியோ கூறும்போது, “அனைவரும் சோர்வடைந்துள்ளனர். ஆனால், நாங்கள் தோல்வி அடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT