Published : 17 Oct 2020 08:18 PM
Last Updated : 17 Oct 2020 08:18 PM

பாகிஸ்தானில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 805 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 805 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பரவலைத் தடுக்க அங்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா தொற்றிலிருந்து 3,06,640 பேர் மீண்டுள்ளனர். இதனால் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 95.1% ஆக உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x