Published : 17 Oct 2020 01:55 PM
Last Updated : 17 Oct 2020 01:55 PM

சீனாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குக் கரோனா பரிசோதனை

சீனாவின் கடற்கரைப் பகுதியான ஜிங்டவ் பகுதியில் திடீரென கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரிசோதனைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜிங்டவ் மாகாண அரசுத் தரப்பில், ''மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதித்துள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூகத் தொற்று யாருக்கும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 91,359 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x