Published : 16 Oct 2020 11:44 AM
Last Updated : 16 Oct 2020 11:44 AM

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் அதிபர் ஏஞ்சலா மெர்கல்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,334 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,48,557 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அரசுத் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,334 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,48,557 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஜெர்மனியில் 6,638 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

உலகம் முழுவதும் 3.8 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x