Published : 14 Oct 2020 08:00 PM
Last Updated : 14 Oct 2020 08:00 PM
இலங்கையில் கடந்த வாரம் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் கரோனா குறைந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுகாதாரத் துறை தரப்பில், “ இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா 5,055 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர், 13 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக அங்கு கரோனா கட்டுப்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT