Published : 13 Oct 2020 06:37 PM
Last Updated : 13 Oct 2020 06:37 PM

ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கரோனா: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 7 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒருவாரமாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் ரஷ்யா,பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வடக்கு இங்கிலாந்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தாலியிலும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதை தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் 3.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x