Published : 13 Oct 2020 05:38 PM
Last Updated : 13 Oct 2020 05:38 PM
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கவுள்ளது. அமெரிக்கா கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் வெளியிட்ட தகவலின்படி, “உலகம் முழுவதும் கரோனாவுக்கு 3,81,00,378 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,86,417 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 2,86,37,375 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 71 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத் தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT