கரோனா: ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

கரோனா: ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
Updated on
1 min read

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 239 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஈரானின் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 239 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். ஈரானில் சமீப நாட்களில் கரோனாவினால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

ஈரானில் கரோனாவுக்கு இதுவரை 27,658 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 4,83,844 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3,97,109 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4 ,274 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in