Published : 05 Oct 2020 08:10 PM
Last Updated : 05 Oct 2020 08:10 PM

பிரேசிலில் கரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது

பிரேசிலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 8,456 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 364 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். பிரேசிலில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நேருங்க உள்ளது.

பிரேசிலில் கரோனாவுக்கு இதுவரை 49,15,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனாவுக்கு 42 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.1,46,375 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x