Published : 05 Oct 2020 02:32 PM
Last Updated : 05 Oct 2020 02:32 PM

மீண்டும் வைரஸைத் தோற்கடித்தோம்: நியூசிலாந்து பிரதமர்

மீண்டும் நாங்கள் கரோனா வைரஸைத் தோற்கடித்துவிட்டோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறும்போது, “கரோனா இரண்டாம் கட்ட அலையை நாம் கட்டுப்படுத்திவிட்டோம். நாம் இரண்டாவது முறையாக கரோனா வைரஸைத் தோற்கடித்துவிட்டோம். இதனைத் தொடர்ந்து நாம் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வாழ்த்துத் தெரிவித்தது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் 1,855 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1,790 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x