Published : 02 Oct 2020 05:01 PM
Last Updated : 02 Oct 2020 05:01 PM

கரோனாவிலிருந்து 2.5 கோடி பேர் குணமடைந்தனர்

உலக முழுவதும் கரோனாவிலிருந்து 2.5 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்று வோல்டோமீட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வோல்டோமீட்டர் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “கரோனா தொற்று ஒருபக்கம் அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு இதுவரை 3.4 பேர் பாதிக்கப்பட, 2.5 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன.

கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x