Published : 28 Sep 2020 04:32 PM
Last Updated : 28 Sep 2020 04:32 PM

ரஷ்யாவில் 11,59,573 பேர் கரோனாவால் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் கூறும்போது, ”ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,180 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் பலியாகி உள்ளனர். மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 11,59,573 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,385 பேர் பலியாகி உள்ளனர். 9,45,920 பேர் குணமடைந்துள்ளனர்.

முன்னதாக, ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x