Published : 28 Sep 2020 12:55 PM
Last Updated : 28 Sep 2020 12:55 PM

உலகம் முழுவதும் கரோனாவுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு 

உலகம் முழுவதும் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து வோல்டோமீட்டர் இணையதளம் வெளியிட்ட தகவலில், “சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 10,00,374 பேர் பலியாகி உள்ளனர். 3.3 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 70 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேல் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். இந்தியா, மெக்சிகோ, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனாவுக்கு 30,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா தடுப்பு மருந்து பரவலாக உலகம் முழுவதும் கிடைக்கும்வரை கரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x