Published : 27 Sep 2020 07:02 PM
Last Updated : 27 Sep 2020 07:02 PM

மெல்போர்னில் கட்டுக்குள் வந்தது கரோனா

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மெல்போர்னில் ஊரடங்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்து வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெல்போர்னில் 16 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது” என்று மெல்போர்ன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மெல்போர்ன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 27,040 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,573 பேர் குணமடைந்துள்ளனர். 872 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x