Published : 27 Sep 2020 03:09 PM
Last Updated : 27 Sep 2020 03:09 PM

துருக்கி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது: சிரியா குற்றச்சாட்டு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் துருக்கி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று சிரியா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிரிய வெளியுறவுத் துறை அமைச்சர் வலித் கூறும்போது, “துருக்கி இப்பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. மேலும், மனித இனத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை துருக்கி இம்மண்ணில் புரிகிறது. பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவின் குற்றச்சாட்டுக்கு துருக்கி இதுவரை பதிலளிக்கவில்லை.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும், சிரியாவின் வடக்குப் பகுதியையும் ஆக்கிரமித்தனர். தொடர்ந்து சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியா மீதான தாக்குதல் காரணமாக துருக்கி மீதான விமர்சனத்தை உலக நாடுகள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x