Published : 27 Sep 2020 11:42 AM
Last Updated : 27 Sep 2020 11:42 AM
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்க உள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறும்போது, “உலகம் முழுவதும் 3.2 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,90,738 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 2.4 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனாவுக்கு 2,04,249 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கரோனா தொற்றால் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கரோனாவுக்கு 1,40,537 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா, மெக்சிகோ, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனாவுக்கு 30,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT