Published : 25 Sep 2020 06:28 PM
Last Updated : 25 Sep 2020 06:28 PM
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,000-ஐத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,222 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஈரானில் கரோனா தொற்று 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT