Published : 25 Sep 2020 02:54 PM
Last Updated : 25 Sep 2020 02:54 PM

நேபாளத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறுத்து நேபாள மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், “நேபாளத்தில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மேற்குப் பகுதியில் சாலைப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், கனமழை பெய்ததால் நாட்டின் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் செப்டம்பர் மாதமும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேபாளத்தில் கரோனா

நேபாளத்தில் இதுவரை 69,301 பேருக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் இரு மாவட்டங்களைத் தவிர்த்து 75 மாவட்டங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x