Published : 22 Sep 2020 08:48 PM
Last Updated : 22 Sep 2020 08:48 PM
பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,37,000-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து பிரேசிலின் சுகாதார அமைப்பு கூறும்போது, “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 377 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 1,37,272 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 13,439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று எண்ணிக்கை 45,58,068 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதலே பிரேசிலில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியள்ளதாக பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT