Published : 22 Sep 2020 11:33 AM
Last Updated : 22 Sep 2020 11:33 AM

ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது

வெள்ளை மாளிக்கைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “ வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடித்தத்தை அனுப்பிய பெண் அமெரிக்கா-கனடா எல்லை அருகே கைது செய்யப்பட்டார். அந்த பெண் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரைசின் எனும் விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் ஒன்று வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே வழக்கமான சோதனையில் கடிதத்தில் விஷம் தடவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரணமாக பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x