Published : 21 Sep 2020 09:05 PM
Last Updated : 21 Sep 2020 09:05 PM

ஈரானில் கரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை: பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,341 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,341 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,481 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஈரானில் கரோனா பலி 24,478 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈரானில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் மூன்றாம் கட்டக் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x