Published : 21 Sep 2020 12:28 PM
Last Updated : 21 Sep 2020 12:28 PM

கரோனா பாதிப்பு:  உலக முழுவதும் 2.2 கோடி பேர் குணமடைந்தனர்

உலக முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ உலக முழுவதும் 3.1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,65,097 பேர் கரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். சுமார் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 67,99,266 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,90,671 பேர் குணமடைந்துள்ளனர். 1,99,474 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 54,87,580 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43,96,399 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 87, 882 பேர் பலியாகினர்.

பிரேசில் கரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 45,44,629 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,63,446 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 1,36,895 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x