Published : 19 Sep 2020 04:49 PM
Last Updated : 19 Sep 2020 04:49 PM
கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,526 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொலம்பியாவின் தேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,526 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,50,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 187 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகள் கரோனா காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அமெரிக்காவும், சீனாவும் அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT