Published : 18 Sep 2020 11:27 AM
Last Updated : 18 Sep 2020 11:27 AM
உலக முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. கரோனா பரவலின் மையமாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது. வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலும் கரோனா தீவிரமாக உள்ளது. மேலும் கரோனா பலி 10 லட்சத்தை நெருங்குகிறது. இதன் எண்ணிக்கை பிற நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தைவிட அதிகம்.
கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 68, 74,596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 52, 14,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அமெரிக்காவும், சீனாவும் அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT