Published : 17 Sep 2020 09:53 PM
Last Updated : 17 Sep 2020 09:53 PM

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனம்

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலஸ்தீனத்தின் வாபா செய்தி நிறுவனம் தரப்பில், “ இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவின் பெய்ட் லஹியா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தின. மேலும் காசாவின் மத்திய பகுதிகலிலும் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் தரப்பில் 15 ஏவுகணைகள் வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இதனைத் தொட்ரந்து இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது இந்த நிலையல் மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979-ல் எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது.

இப்போது பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x