Published : 17 Sep 2020 07:34 PM
Last Updated : 17 Sep 2020 07:34 PM

ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கரோனா: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் கவனம் தேவை. மேலும், தனிமைப்படுத்தும் நாட்களைக் குறைப்பது தவறு. 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தால் மட்டுமே உடலின் உள்ளிருக்கும் கரோனா வைரஸை அறிய முடியும்” என்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இதன் காரணமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x