Published : 16 Sep 2020 05:16 PM
Last Updated : 16 Sep 2020 05:16 PM

ஐக்கிய அமீரகத்துடன் இணைந்து நடத்தும் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சாதகமான முடிவுகள்: சீனா

ஐக்கிய அமீரகத்துடன் இணைந்து நடத்தும் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் சாதகமான முடிவுகளை எட்டியுள்ளதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் கூறும்போது, “ஐக்கிய அமீரகத்துடன் சீனா நடத்தும் கரோனா தடுப்பு மருந்துப் பரிசோதனை மூன்றாம் கட்டத்தின் இறுதி நிலையை எட்டியுள்ளது. முடிவுகள் சாதகமாக வந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மூன்றாம் கட்டச் சோதனைகள் முடிந்த ஆறு வாரம் கழித்து தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என்று ஐக்கிய அமீரக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசிகள் முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகளின் செயல்பாட்டைக் கடுமையாக முடக்கியுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்து கண்டறியும் சோதனையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவின் மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 81,782 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,456 பேர் குணமடைந்துள்ளனர். 402 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x