Published : 16 Sep 2020 06:53 AM
Last Updated : 16 Sep 2020 06:53 AM

பெண்களுக்கான ஐ.நா. அமைப்பில் இந்தியா வெற்றி; சீனா தோல்வி

நியூயார்க்

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (இசிஓஎஸ்ஓசி) கீழ், பெண்களுக்கான பாலின சம உரிமை, அதிகாரம் போன்ற விவகாரங்களை கவனிக்கும் ‘யுஎன் கமிஷன் ஆன் ஸ்டேடஸ் ஆப் உமன்’ (சிஎஸ்டபிள்யூ) செயல்படுகிறது.

இந்நிலையில், இசிஓஎஸ்ஓசி.யின் 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த அமைப்பில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகள் போட்டியிட்டன. இசிஓஎஸ்ஓசி அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தத் தேர்தலில் 54 நாட்டின் உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஆப்கானிஸ்தான் 39 வாக்குகள், இந்தியா 38 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றன. இதன்மூலம் இந்த அமைப்பில் 2 நாடுகளும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேர்தலில் வெற்றி பெற்ற ஆப்கன் மற்றும் இந்தியா வரும் 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை உறுப்பினர்களாக செயல்படும்.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆண் - பெண் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பால் இந்த தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவை தேர்ந்தெடுத்த உறுப்பினர் நாடுகளுக்கு நன்றி ’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x