Published : 15 Sep 2020 07:27 PM
Last Updated : 15 Sep 2020 07:27 PM

கரோனா: ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழப்பு இல்லை

கடந்த இரு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இன்று கரோனா தொற்றுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தரப்பில், “இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் 50 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் கரோனா பாதிப்பு குறைந்தாலும் மெல்போர்னிலும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான விக்டோரியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 26,738 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,647 பேர் குணமடைந்துள்ளனர். 816 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x