Published : 12 Sep 2020 08:13 PM
Last Updated : 12 Sep 2020 08:13 PM

ஐக்கிய அமீரகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு

ஐக்கிய அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டான் வெளியிட்ட செய்தியில், “ ஐக்கிய அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 399 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

உலகின் பல முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x