Published : 11 Sep 2020 06:40 PM
Last Updated : 11 Sep 2020 06:40 PM
சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “ சிரியாவில் அலெப்போ நகரில் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை வெள்ளிக்கிழமை காலை நடத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதல் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 7 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.சிரியாவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடந்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஈரான் தனது நாட்டு ராணுவ வீரர்களை சிரியா பாதுகாப்பு படைக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை அந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானை தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாக கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT