Published : 11 Sep 2020 03:53 PM
Last Updated : 11 Sep 2020 03:53 PM

கரோனா வைரஸ்: ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 10, 51,874

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,504 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட அங்கு பாதிப்பு எண்ணிகை 10, 51,874 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,504 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,51,874 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 600க்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கரோனாவுக்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி நாட்டின் சுகாதாரத் துறை ஒப்புதழக்கு பிறகு இந்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள்ளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும் தங்கள் தடுப்பூசி அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x