Published : 10 Sep 2020 09:11 PM
Last Updated : 10 Sep 2020 09:11 PM

சிங்கப்பூருக்கு வரும் இந்தியர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்: சுகாதாரத்துறை

எங்கள் நாட்டுக் குடிமக்கள் அல்லாத இந்தியப் பயணிகள் அனைவரும் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளித்த பிறகே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை தரப்பில், “சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு வயதுக் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்த மேலும் இருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாதவர்கள் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை இருக்கிறது. இதன்படி தடை விதித்து சிங்கப்பூர் அரசு முன்னரே உத்தரவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் இதுவரை 57,229 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர் பலியாகி உள்ளனர். 56,492 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x