Published : 10 Sep 2020 10:43 AM
Last Updated : 10 Sep 2020 10:43 AM

மெக்சிகோவில் கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 611 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பலி அங்கு 69,095 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மெக்சிகோவில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 611 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 69, 095 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் மெக்சிகோவில் கரோனாவால் 4, 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் 6,47,507 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 195,239 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,28,653 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 75,091 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 69, 095 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x