Last Updated : 05 Sep, 2015 09:46 AM

 

Published : 05 Sep 2015 09:46 AM
Last Updated : 05 Sep 2015 09:46 AM

30 அகதிகள் கடலில் மூழ்கி பலி?

லிபியாவைச் சேர்ந்த 30 அகதிகள் இத்தாலி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

லிபியாவைச் சேர்ந்த சுமார் 120 அகதிகள் ஒரு படகில் ஐரோப்பாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களின் படகு இத்தாலிய கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்து இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று 90 பேரை மீட்டனர். சுமார் 30 அகதிகளை தேடும் பணி தொடர்கிறது.

இதுகுறித்து ஐ.நா. சபை வட்டாரங்கள் கூறியபோது, இந்த ஆண்டில் இதுவரை 2701 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சுமார் 3.64 லட்சம் அகதிகள் மத்திய தரைகடல் வழியாக கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளுக்கு வந்துள்ளனர், அவர்கள் தவிர பல லட்சம் பேர் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி உள்ளனர் என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x