Published : 05 Sep 2020 09:16 PM
Last Updated : 05 Sep 2020 09:16 PM
இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராக் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் இராக்கில் 5, 036 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இராக்கில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,52,075 ஆக அதிகரித்துள்ளது. 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
மேலும் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT