Published : 03 Sep 2020 10:09 PM
Last Updated : 03 Sep 2020 10:09 PM

சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்: இம்ரான் கான்

சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான் கான் பதிலளித்துள்ளார்.

அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குரல் எழுப்பத் தவறும் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விமர்சித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுமாறு சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்ற இம்ரான் கானின் கோரிக்கைக்கு 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு செவி சாய்க்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x