Published : 01 Sep 2020 03:13 PM
Last Updated : 01 Sep 2020 03:13 PM

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், ''தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்குப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும்வரை விடுக்கப்படவில்லை. எனினும், நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை.

சிலியில் கடந்த ஜூன் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகியது. இந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரிங் ஆஃப் ஃபயர்

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி சிலியையும் உள்ளடக்கி உள்ளது. இதன் காரணமாக சிலியும் நில அதிர்வுகளை உள்ளடக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x