Published : 31 Aug 2020 09:38 PM
Last Updated : 31 Aug 2020 09:38 PM
ஈரானில் கடந்த சில நாட்களாகவே 2,000க்கு குள்ளாகவே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று குறைந்து உள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதார அமைப்பு தரப்பில் கூறும்போது, “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,642 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 3,75,212க்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,571 பேர் பலியாகி உள்ளனர். 323,233 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்து. இதனால் கரோனா தொற்று அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT