Published : 31 Aug 2020 05:47 PM
Last Updated : 31 Aug 2020 05:47 PM

வங்கதேச வெள்ளம் பலி 250-ஐ தாண்டியது

வங்கதேசத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வங்கதேச சுகாதாரத் துறை அதிகாரிகள்,” வங்கதேசத்தில் கடந்த மாதமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுவரை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி,பாம்பு கடித்து, மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர் வற்றியுள்ளது என்று வங்கதேச நீர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர்வரை வங்கதேசத்தில் மழை காலமாகும் . இதன் காரணமாக வருடந்தோறும் அங்குள்ள நூற்றுக்கணக்கான ஆறுகள் வெள்ளப் பெருக்கை சந்தித்து வருகின்றன.

வங்கதேசம் மட்டுமல்லாது, பாகிஸ்தான், ஆப்கானிதான் போன்ற நாடுகளும் இவ்வாண்டில் பருவ மழைக் காரணமாக கடுமையான வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளிலும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x