Published : 26 Aug 2020 07:49 PM
Last Updated : 26 Aug 2020 07:49 PM

கரோனா: ஈரானில் பலி 21 ஆயிரத்தைத் தாண்டியது

ஈரானில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''துரதிர்ஷ்டவசமாக சமீபத்திய வாரங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அனைவரும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை அங்கு 21,020 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஈரானில் 3,65,606 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x