Published : 26 Aug 2020 03:02 PM
Last Updated : 26 Aug 2020 03:02 PM
ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாடுகளிடையே போதிய நிதி இல்லை என்று உலக சுகாதார அமைப்பு வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க கண்டத்திற்கான இயக்குனர் ரெபெக்கா மொய்தி கூறும்போது, “ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அந்நாடுகளிடையே போதிய நிதி இல்லை. தங்களால் முயன்றவரை தற்போது தொழில் நுட்ப உதவிகளை செய்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை முன்னரே எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மேலும், பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT