அலெக்ஸி நாவல்னிக்கு புதின் மூலம் விஷம் கொடுக்கப்பட்டதா? ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

அலெக்ஸி நாவல்னிக்கு புதின் மூலம் விஷம் கொடுக்கப்பட்டதா? ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
Updated on
1 min read

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ரஷ்ய அதிபர் புதினைத் தொடர்ந்து விமர்சித்து வருபவருமான அலெக்ஸி நாவல்னிக்கு டீ யில் விஷம் வைத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதின் மூலம் நாவல்னிக்கு டீயில் விஷம் வைத்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் அலெக்ஸி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலெக்ஸி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அலெக்ஸி விஷம் குடித்ததாகத் தெரிகிறது. அதற்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்படுகின்றன. அலெக்ஸி உடல்நிலை மோசமாக உள்ளது. ஆனால், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை” என்று கூறப்படுள்ளது.

ஆனால், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவமனை, விஷம் வழங்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் அவரது உடலில் தெரியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில் அலெக்ஸி நாவல்னியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in