Published : 22 Aug 2020 08:25 PM
Last Updated : 22 Aug 2020 08:25 PM

உலகம் முழுவதும் கரோனா பலி 8 லட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்ததுள்ளது.

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,04,273 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 2.3 கோடிக்கு அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பால் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. இவ்விரு பிராந்தியங்களில் மட்டும் 2,54,897 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனா வைரஸால் 1,75,350 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,13,358 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 59,610 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 55,794 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x